Author: Priya ram
•Wednesday, January 26, 2011
விளக்கொளியில் அடங்கிவிடும்
சிறிய அறை கொண்ட
ஓட்டு வீடு

புள்ளிக்கோலம் போட
அகலமான வாசல்
மாடுகளைக் கட்டிவைக்க
வீட்டருகே பட்டி
காட்டு மரங்கள் செடி கொடிகள்
நிறைந்த சூழல்

மாலை நேரத்தில்
பெயர் தெரியாத பூச்சிகளின்
ரீங்கார இசை

இரவு உணவு வாசலில்
கயிற்றுக் கட்டிலில்

நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டும்
உன்னோடு கொஞ்சம்
கதை பேசிக்கொண்டுமாக
நாட்கள் இனிமையாக
நகர்ந்திருக்கும்

கூடை முடைந்து கொண்டோ
பானை செய்து கொண்டோ
விவசாயம் பார்த்துக் கொண்டோ
உனக்கு அனுசரணையாய்
நானும்...
எனக்கு ஆதரவாய்
நீயும் இருந்திருந்தால்
நாட்கள் இனிமையாகவே
நகர்ந்திருக்கும்

ஆனால்.....

இந்த நகரத்து நரகத்தில்
கணிப்பொறியாளனாய்
நீயிருக்க.....
கனற்பொறியைக் கக்கிக்கொண்டு
நகர்கின்றன நாட்கள்.


 
This entry was posted on Wednesday, January 26, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...