Author: Priya ram
•Tuesday, February 01, 2011
சுற்றி விளையாட தூண்கள்
ஒளி காட்ட விளக்கு மாடங்கள்
கதை பேசித் தூங்க ரெட்டைத் திண்ணை
மழையை ரசிக்க மல்லிகை படர்ந்த முற்றம்
பத்தியும் பக்தியும் மணக்கும் பூஜையறை
பித்தளைப் பாத்திரக் காற்று மணக்கும் காமிரா அறை
உறவின் பெருமை சாற்றும் பிரேம் போட்டோ படங்கள்
அந்துருண்டை மணம் வீசும் நிறம்போன ட்ரங்கு  பொட்டி
தவறாய் மணி காட்டி தாளம் போடும் கூண்டுக் கடிகாரம்
தலைமுறை பல கண்ட மாதுளசி கொல்லை
வாழ்ந்துகொள்ள வாய்ப்பொன்று கிடைத்தால்
பத்திரப்படுத்துங்கள் அப்படியே
பாட்டியின் வீட்டை....



This entry was posted on Tuesday, February 01, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On February 2, 2011 at 11:35 PM , Mahi said...

நல்ல கவிதைகள் ப்ரியா!

 
Related Posts Plugin for WordPress, Blogger...