Author: Priya ram
•Wednesday, October 19, 2011

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 3/4 கப்
தண்ணீர் - 5 கப்
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு  
பெருங்காயம்
கருவேப்பிலை
உப்பு
காய்ந்த மிளகாய்

செய்முறை :

அரிசி, பருப்பை வாணலியில் (எண்ணெய் விடாமல் ) வறுத்து வச்சுக்கணும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, தண்ணீர் விட்டு, உப்பு போடணும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி, பருப்பு களைந்து போட்டு நன்றாக கிளறனும். அடுப்பை சிம் - யில் வைத்து பருப்பு, அரிசி வெந்ததும் இறக்கிடணும்.


பெருங்காயம் வாசனையுடன் உசிலி ரெடி.



இந்த உசிலி கூட கார சட்னி தொட்டுண்டு சாப்பிடலாம்.
This entry was posted on Wednesday, October 19, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On October 20, 2011 at 2:35 AM , Mahi said...

குக்கர்ல இல்லாம பாத்திரத்தில் சாதமே நான் சமைச்சதில்ல ப்ரியா! ;) இது குக்கர்ல வைக்கலாமா?

காய்கறி உசிலிதான் கேள்விப்பட்டிருக்கேன்,இது புதுசா இருக்கு..கொஞ்சம் பொங்கல் மாதிரி இருக்கு. நல்லா இருக்கு!

 
On October 20, 2011 at 4:31 PM , Priya ram said...

மகி, பருப்பு உசிலி காய்னு பீன்ஸ், கொத்தவரங்காய் - ல செய்வாங்க... அது வேற. இது ஒரு டிபன்.

பொங்கல் செய்யும் போது அரிசி, பருப்பு எல்லாம் குழைய வேக வைப்போம்..... இதுல அரிசி பருப்பு உதிர் உதிரா இருக்கணும்...

குக்கர் - ல கூட செய்யலாம் மகி. ட்ரை பண்ணி பாருங்க.

 
On October 22, 2011 at 4:26 PM , Kalyan Panja said...

Just mouthwatering....looks so easy to prepare and delicious!

 
Related Posts Plugin for WordPress, Blogger...