Author: Priya ram
•Saturday, December 31, 2011
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



Author: Priya ram
•Tuesday, December 20, 2011
இந்த தோசை  பருப்பு, மிளகு, சீரக வாசனையுடன் ரொம்ப நல்லா இருக்கும். இதுக்கு தொட்டுக்க மிளகாய் பொடி, எண்ணெய் தான் சரியான காம்பினேஷன். தோசை மேல மொரு மொறுப்பாக இருந்தாலும், உள்ளுக்குள் உப்புமா மாதிரியே இருக்கும். சாப்பிட நல்லா இருக்கும்.






தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1   / 2 கப்
பயத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1   / 4 கப்
மிளகு
சீரகம்
காய்ந்த மிளகாய் - 2
அரிசி உடைசல் -  2 கப்
தயிர் - 1   / 2 கப்
உப்பு

செய்முறை :

அரிசி உடைசலை 2  முறை களைந்து, தயிர் விட்டு கலந்து வைக்கணும்.
துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து  அரை மணிநேரம் ஊற வைக்கணும்.
மிளகு, சீரகம் 15  நிமிஷம் ஊற வைக்கணும்.
இந்த தோசைக்கு காரத்திற்கு மிளகாயை விட மிளகு தான் அதிகம் சேர்த்துக்கனும்.



பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கொர கொரப்பாக அரச்சுக்கணும்.
அரைத்த விழுதை அரிசி உடைசல் கலவையுடன் கலந்து அடை மாவு பதத்திற்கு திக்காக கரைச்சுக்கனும்.


 தடிமனாக, நிறைய எண்ணெய் விட்டு, மொரு மொறுப்பாக தோசை செய்தால் தவலை தோசை ரெடி.... சுட சுட செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்....


இந்த தோசையை, தோசை கல்லில் செய்வதை விட வாணலியில் செய்தால், இன்னும் நன்றாக இருக்கும். ஒரு கரண்டி மாவு எடுத்து வாணலியில் விட்டு, சுத்தி எண்ணெய் நிறைய விட்டு, அடுப்பை சின்னதாக வைத்து, மூடி வச்சிடணும். வெந்ததும், திருப்பி போட்டு (கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், லாவகமா திருப்பி போடணும் ) இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால், குண்டு குண்டாக தோசை சூப்பர் ரா இருக்கும்....


பார்க்க சாதா தோசை மாதிரி இருந்தாலும் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... செய்து சாப்பிட்டு தான் பாருங்களேன்..... 

குறிப்பு :

அரிசில கொஞ்சமா தண்ணி தளிச்சு பிசறி வச்சிண்டு, ரவை மாதிரி மிக்சில போட்டு ஒடச்சிக்கணும். ஒன்னும் ரெண்டுமாக இல்லாம, ரொம்ப மாவாவும் இல்லாம ரவை மாதிரி ஒடச்சிக்கணும்.

இந்த அரிசி ஒடசலை வச்சு அரிசி உப்புமா, உப்புமா கொழுக்கட்டை, தவலை தோசை எல்லாம் செய்யலாம்.
Author: Priya ram
•Tuesday, November 29, 2011
தேவையான பொருட்கள் :

எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
துவரம் பருப்பு
தக்காளி
கத்தரிக்காய்
புளி
உப்பு
சாம்பார் மிளகாய்பொடி
மஞ்சள் பொடி

வறுத்து பொடி செய்ய :

தனியா - 2  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
வெந்தியம் -  1  / 2  டீஸ்பூன்
 துவரம் பருப்பு - 1   ஸ்பூன்
துருவின தேங்காய் - 2  ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், வெந்தியம், துவரம் பருப்பு, துருவின தேங்காய் போட்டு வறுத்து பவுடர் செய்து வச்சுக்கணும்.

புளியை நன்றாக கரைச்சு வச்சுக்கணும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு  போட்டு தக்காளி, கத்தரிக்காய் போட்டு வதக்கி, புளி தண்ணீர் கரைத்து விட்டு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கொதிக்க விடனும். திக்காக வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி,
3  ஸ்பூன் வறுத்து பொடி பண்ண பவுடர் போட்டு, 2  ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு கிளறினால், பொடி போட்ட வத்த குழம்பு ரெடி....





இந்த வத்த குழம்பை காய்ந்த சுண்டைக்காய் வத்தல், வெண்டைக்காய் போட்டும் செய்யலாம். காய், தக்காளி போடும் போதே சின்ன வெங்காயம் போட்டு வதக்கியும் செய்யலாம். செய்து சாப்பிட்டு பாருங்க.... சூப்பர் ரா இருக்கும்.
Author: Priya ram
•Saturday, November 12, 2011
நானும், என்னவரும் வெளில சாப்பிட போகும் போது கட்லெட் ஆர்டர் பண்ணால் சாப்பிடவே மாட்டார்....  கட்லெட் வெளில சாப்பிடவே அவருக்கு புடிக்கலை. வீட்டுல நான் செய்து தரேன்னு சொல்லி இருந்தேன்.....

நானும், என்னோட அக்காவும் சின்னதுல கட்லெட் செய்து இருக்கோம். வெறும் உருளைகிழங்கு, வெந்நீரில் நனைச்ச பிரட் வச்சு செய்து இருக்கோம்.

தொலைக்காட்சில ஒரு தடவை ஈஸியாக   கட்லெட் செய்ய சொல்லி கொடுத்தாங்க. அதை பார்த்து விட்டு, அடுத்த நாளே ட்ரை பண்ணேன். ரொம்ப நல்லா வந்தது.... என்னவருக்கும் புடிச்சு இருந்தது....

தேவையான பொருட்கள் :

கேரட் - 1
உருளைகிழங்கு - 2
பச்சை பட்டாணி
கொத்தமல்லி
உப்பு
பிரட் கிரம்ஸ்
வறட்டு மிளகாய் பொடி
எண்ணெய்

செய்முறை :

உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி தனி தனியாக வேக வச்சுக்கணும்.


 வெந்த  காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, மிளகாய் பொடி போட்டு நன்றாக பிசையணும்.


பிசைந்து வச்சு இருக்கறதை வடை மாதிரி தட்டி பிரட் கிரம்ஸ் -ல்  பிரட்டி , தவாவில் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக பொறித்து எடுத்தால் கட்லெட் ரெடி...


கட்லெட் கூட டொமேடோ கெட்சப் தொட்டுண்டு சாப்பிடலாம்.


Author: Priya ram
•Wednesday, November 09, 2011

இந்த குருமா சப்பாத்தி , இட்லி, தோசைக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் - 1 
பீன்ஸ் - 6
கோஸ் - 1 / 4 
வெங்காயம் - 2 
தக்காளி - 2
எண்ணெய்
நெய்
லவங்கம் -  2 
சீரகம் - 1 / 2  ஸ்பூன்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
பால் - 1  கப்  
தயிர் - 1  கப் 


செய்முறை :

கேரட், பீன்ஸ், கோஸ் பொடியாக நறுக்கி வைக்கணும்.


வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கணும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய், நெய் விட்டு, சீரகம், லவங்கம் வெடிக்க விடனும். வெங்காயம், தக்காளி போட்டு வதக்கணும். உப்பு, வறட்டு மிளகாய் பொடி போட்டு ஒரு முறை கிளறனும். காய் எல்லாம் போட்டு வதக்கணும்.

பால், தயிர் விட்டு கலந்து காய் வேக விடனும்.


காய்கள் வெந்து குருமா ரெடி....

கொஞ்சம் அதிகமா பால், தயிர் சேர்த்து செய்தால் க்ரேவி மாதிரி கிடைக்கும்.

சப்பாத்தியுடன் பால், தயிர் குருமா சாப்பிட ரெடி.


Author: Priya ram
•Friday, October 21, 2011
ஒரு ரெண்டு வாரமா youtube -   ல வாழ்த்து அட்டை செய்வது எப்படின்னு பார்த்து கிட்டு இருந்தேன். பார்க்க பார்க்க ஆர்வம் அதிகமாக, வீட்டில் இருந்த பொருட்களை வைத்தும்,அருகில் உள்ள  கடையில் கிடைத்த பொருட்களை வைத்தும் என்னவருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை செய்து தந்தேன். அதன் தொடர்ச்சியாக, இன்னிக்கு என்னோட அக்கா பையன், இரண்டாவது  பிறந்த நாள். இது அவனுக்காக செய்த 
வாழ்த்து அட்டை.



  

இன்னிக்கு காலைல அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது,
Thank  you  சொல்லுனு அக்கா சொல்லி கொடுக்க, அவன் மழலை சொல்லில்
tank கூ  நு சொல்ல, கேட்க ரொம்ப அருமையா இருந்தது. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுகிட்டே இருக்கு.....
Author: Priya ram
•Wednesday, October 19, 2011

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 3/4 கப்
தண்ணீர் - 5 கப்
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு  
பெருங்காயம்
கருவேப்பிலை
உப்பு
காய்ந்த மிளகாய்

செய்முறை :

அரிசி, பருப்பை வாணலியில் (எண்ணெய் விடாமல் ) வறுத்து வச்சுக்கணும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, தண்ணீர் விட்டு, உப்பு போடணும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி, பருப்பு களைந்து போட்டு நன்றாக கிளறனும். அடுப்பை சிம் - யில் வைத்து பருப்பு, அரிசி வெந்ததும் இறக்கிடணும்.


பெருங்காயம் வாசனையுடன் உசிலி ரெடி.



இந்த உசிலி கூட கார சட்னி தொட்டுண்டு சாப்பிடலாம்.
Author: Priya ram
•Monday, October 17, 2011
பயத்தம் பருப்பு தோசை செய்வது ரொம்ப ஈஸி. இதில் கொத்தமல்லி நிறைய போட்டு செய்வதால், வாசனையாக ரொம்ப நல்லா இருக்கும். 


தேவையான பொருட்கள் :

அரிசி - 1  கப் 
பயத்தம் பருப்பு - 1  கப்
இஞ்சி 
பச்சை மிளகாய் - 2 
கொத்தமல்லி - 2 கப் 
உப்பு 
எண்ணெய்

செய்முறை :

பயத்தம் பருப்பு, அரிசியை  1  மணி நேரம் ஊற வைக்கணும்.



ஒரு மணி நேரத்துக்கு பிறகு மிக்சில கொர கொரன்னு  அரச்சுக்கணும்.

அதுல கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரச்சுக்கணும்.


 தோசை மாவு மாதிரி இருக்கணும்.


அரச்ச உடனே தோசை செய்து விடலாம்.


இந்த தோசைக்கு கொஞ்சமாக எண்ணெய் சேர்த்தால் போதும்.


தோசைக்கு தொட்டுக்க சட்னி, சாம்பார், மிளகாய் பொடி எது வேண்டுமானாலும் போட்டுக்கலாம். நான் முருங்கைக்காய் சாம்பார் தொட்டுண்டு சாப்பிட்டேன். உங்களுக்கு புடிச்சதை தொட்டுண்டு பெசரெட்டு செய்து சாப்பிட்டு பாருங்க.

Author: Priya ram
•Sunday, October 09, 2011
என்னவருக்கு பஜ்ஜினா ரொம்ப புடிக்கும். ஒரு சண்டே சாயந்திரம் காய் எல்லாம் கட் பண்ணி கொடுத்து,  பஜ்ஜி செய்து தரச்  சொல்லி கேட்டார். (காய் கட்பண்ணி வச்சுட்டா மறுப்பு சொல்லாம செய்து தந்து தானே ஆகணும். குலோப் ஜாமூன் செய்ய நாள் தள்ளின மாதிரி,  பஜ்ஜி செய்து தரவும் நாள் தள்ள போறேன்னு தான் காய் கட் பண்ணி தந்துட்டார் ). வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு பஜ்ஜி செய்து தந்தேன். என்னவருக்கு தக்காளி பஜ்ஜினா ரொம்ப புடிக்கும்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1  கப்
அரிசி மாவு - 1/4  கப்
வறட்டு மிளகாய் பொடி
உப்பு
பெருங்காயம்
வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு - 2 



மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி எல்லாம் போட்டு தண்ணீர் விட்டு, கொஞ்சம் திக்கா தோசை மாவு மாதிரி கரைச்சுக்கனும்.

என்னவர் கட் பண்ணி கொடுத்த காய்கள். தக்காளி, வெங்காயம், உருளை கிழங்கு, வட்ட வட்டமாக கொஞ்சம் திக்காக கட் பண்ணி வச்சுக்கணும்.

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் பஜ்ஜி ரெடி.


வெங்காயம், உருளைகிழங்கு பஜ்ஜி.


தக்காளி பஜ்ஜி.


இதே மாதிரி பீர்க்கங்காய், கத்தரிக்காய் பஜ்ஜியும் செய்து சாப்பிடலாம்.

குறிப்பு : அது என்ன.... சண்டே தான் பஜ்ஜி செய்து சாப்பிடனுமானு நீங்க கேட்கறது தெரியறது.... என்ன பண்ணறது.... மத்த நாள் எல்லாம் எங்க வீட்டு ரங்கமணி   ஆபீஸ் - ல இருந்து வரவே நைட் ஆகிடறது. பஜ்ஜி சாயந்தர நேரத்தில் சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். அதான் எங்க வீட்டுல பஜ்ஜினா சண்டே தான். அம்மா வீட்டுல பஜ்ஜி செய்தா கூடவே கேசரியும் செய்துடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும்.  
அட....  இன்னிக்கும் சண்டே.... எல்லோரும் உங்களுக்கு புடிச்ச பஜ்ஜி செய்து சாப்பிடுங்க..... :)



Author: Priya ram
•Monday, October 03, 2011
இந்த வெங்காய சட்னி எனக்கு ரொம்ப புடிக்கும். ஒவ்வொரு  டிபன்க்கு ஏத்த மாதிரி சட்னி தொட்டுண்டு சாப்பிடுவேன். இட்லி, தோசைக்கு இந்த சட்னி தான் பெஸ்ட் காம்பினேஷன்.  இந்த சட்னி இருந்தால் பத்து இட்லி கூட சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 4

தக்காளி - 2 
கடுகு - 1   டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
உப்பு
புளி
எண்ணெய்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கணும்.


வெங்காயம் லைட்டாக கலர் மாறும் போதே இறக்கி, ஆறவைத்து கூட புளி, உப்பு போட்டு அரைத்தால் வெங்காய சட்னி தயார்.


இட்லிக்கு தொட்டுக்க இந்த சட்னி போட்டுக்கும் போது, சட்னி மீது கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து தொட்டுண்டு சாப்பிட்டா........ சூப்பர் ரா இருக்கும்.


Author: Priya ram
•Friday, September 30, 2011
இந்த மணி மாலைகள்  செய்வது ரொம்ப ஈஸி. கருப்பு மணி சரம் வைத்து இந்த மணி செய்தேன். மணி சரம் விலை
25  ரூபாய், டாலர்  55  ரூபாய். இதர செலவுடன்  மொத்தம் 90  ரூபாய் தான் செலவு ஆகும்.




ஹிந்தி நாடகம் ஒண்ணுல, ஒரு பெண்  இந்த மாதிரி ஐந்து சரத்தில் மணி மாலை போட்டுண்டு இருந்ததை பார்த்தேன். அதை பார்த்ததும் அதே மாதிரி ட்ரை பண்ணலாம்னு ஐந்து ஹோல் இருக்க மாதிரி சமோசா லாக் தேடினேன். எந்த கடையிலயும்  கிடைக்காததால் மூணு ஹோல் இருக்க சமோசா லாக் வைத்து இந்த மணி செய்தேன்.



பின்னாடி  மணி வைப்பதை விட கயிறு வைத்தால் நல்லா இருக்கும்னு ஐடியா வந்ததால், பின்னாடி கயிறு வைத்து மணியை மாத்தினேன். எது நல்லா இருக்குனு சொல்லுங்க.....




இந்த சிவப்பு, பச்சை மணியில் மீதி இருந்ததை வைத்து இந்த மல்டி கலர் மணி செய்தேன். இந்த டாலரும்
55  ரூபாய் தான். குறைந்த செலவில் அழகழகான மணிகள் ரெடி.



Related Posts Plugin for WordPress, Blogger...