Author: Priya ram
•Thursday, March 01, 2012
எங்க அம்மா, அரச்சு விட்ட  சாம்பார் தனியா செய்து விட்டு, சாதம் செய்து அதில் நெய், நல்லெண்ணெய் விட்டு குழைய பிசைந்து சாம்பார் விட்டு நன்றாக கிளருவாங்க. அந்த மாதிரி தான் நானும் செய்துகிட்டு இருந்தேன். இந்த முறை ரொம்ப ஈஸி. ட்ரை பண்ணி பாருங்க....





தேவையான பொருட்கள் :

அரிசி - 1  கப்
thuvaram பருப்பு - 3  / 4 கப்
கத்தரிக்காய் - 1 
உருளைக்கிழங்கு - 2 
பீன்ஸ் - 10 
கேரட் - 3 
சௌ சௌ - 1 
பச்சை பட்டாணி - 1 / 4 கப்

வறுத்து அரைக்க :

கடலை பருப்பு - 2  டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 
பெருங்காயம்
வெந்தயம் - 1  / 4  டீஸ்பூன்
துருவின தேங்காய்
லவங்கம் - 4 
வெங்காயம் - 2 

தாளிக்க :

நல்லெண்ணெய்
நெய்
கடுகு
முந்திரி பருப்பு

அலங்கரிக்க :

கேப்சிகம் - 1 / 4 
தக்காளி - 2 
கொத்தமல்லி


மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
உப்பு
புளி

செய்முறை :


தேவையான பொருட்கள் லிஸ்ட் பார்த்ததும் ஓடிடாதீங்க..... பார்க்க தான் அப்படி இருக்கும். செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.
 சரி செய்முறைக்கு போவோம்.

1 . அரிசி, பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், சௌ சௌ
பச்சை பட்டாணி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  எல்லாம் குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு  வேக வைக்கணும்.

2 . வறுத்து அரைக்க கொடுத்து உள்ளவற்றை  எண்ணெய் விடாமல்   வறுத்து பேஸ்ட் பண்ணிக்கணும்.  ( வெங்காயமும் வறுத்து அரச்சு சேர்த்துடுங்க... சின்ன வெங்காயம் என்றால் சூப்பர் ரா இருக்கும். )

3 . புளி தண்ணீர் கரைத்து அதில் இந்த பேஸ்ட் கொட்டி, கட்டி இல்லாமல் கரைச்சுக்கனும்.

4 . குக்கர் பிரஷர் போனதும், நன்றாக கலந்து விட்டு, அதில் புளி கரைசலை விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்து நன்றாக கிளறனும்.

5 . உப்பு சேர்த்து, சூடாக இருக்கும் போதே தக்காளி, கேப்சிகம் பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

6 . வாணலியில் நெய் வைத்து காய்ச்சி முந்திரி வறுத்து கொட்டனும்.
 நல்லெண்ணெய் காய்ச்சி கொட்டனும். கடுகு தாளித்து கொட்டனும்.

7 .  கொத்தமல்லி தூவினால், கம கம பிசி பெலே பாத் ரெடி.

8 . சிப்ஸ், ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ஓ சூப்பர் தான்.....



This entry was posted on Thursday, March 01, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On March 2, 2012 at 4:18 AM , Mahi said...

பிஸி பேளே பாத் நல்லா இருக்கு ப்ரியா! நான் கொஞ்சம் வேறுமாதிரி செய்வேன்.உங்க மெதட் ட்ரை பண்ணி பார்க்கணும். :)

 
On March 10, 2012 at 5:29 PM , காமாட்சி said...

நான்கூட முன்பு எப்போதோ பதிவு போட்டிருக்கேன். இதுவும் ஸுலபமாயிருக்கு. சுடச்
சுட கலந்து கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அளவும் ஸரியாக இருக்கும். வேண்டிய அளவு தயாரிப்புக்கு நல்ல யோசனை.நன்நாயிருக்குப்ரியா

 
Related Posts Plugin for WordPress, Blogger...