Author: Unknown
•Sunday, January 20, 2013

இந்த இட்லி நல்லெண்ணெய், நெய் வாசனையோட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... மாவு அரைத்ததும் செய்து விடலாம்...

தேவையான பொருட்கள் :-

உளுத்தம் மாவு - 2 கை
அரிசி - 1 1/2 ஆழாக்கு
மிளகு பொடி  - 4 ஸ்பூன்.
சீரக பொடி - 1 ஸ்பூன்
சுக்குபொடி - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
புளிச்ச தயிர் - 1/2 கப்

செய்முறை :

1. இட்லிக்கு மாவு அரைக்கும் போது, உளுந்து மாவு 2 கை எடுத்துக்கணும்...
2. 2 ஆழாக்கு அரிசியை ரவை மாதிரி மிச்சில அரச்சுக்கணும்..இதுக்கு பேர் தான் அரிசி உடைசல்..இதை வைத்து உப்புமா, தவளை தோசை, காஞ்சீபுரம் இட்லி பண்ணலாம்...
3. அரிசி உடைசலை தண்ணீர் விட்டு களைந்து, உளுந்து மாவில் சேர்க்கணும்...


4. புளிச்ச தயிர் விட்டு நன்றாக கலக்கணும்...
5. நெய்யில் முந்திரி வறுத்து கொட்டனும்...
6. எண்ணெய், நெய், மிளகு பொடி,சீரக பொடி ,  உப்பு, சுக்கு பொடி எல்லாம் போட்டு கலந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்...



7. குட்டி, குட்டி டம்ளரில் நெய் தடவி மாவு விட்டு



 வேக வைத்து எடுக்கணும்...


 கத்தியால் கேக் எடுப்பது போல் எடுத்தால்  காஞ்சீபுரம் இட்லி ரெடி..


8. மிளகாய் பொடியுடன் தொட்டுண்டு சாப்பிட சூப்பர் ரா இருக்கும்...


மாவு அரச்சவுடன் 1/2 மணி நேரம் வைத்து உடனே  செய்து விடனும்... இந்த இட்லிக்கு கார சட்னி கூட தொட்டுண்டு சாப்பிடலாம்...  "அம்மா சமையல்" ல இந்த குறிப்பு சீக்கிரம் தருவதாக சொல்லி இருந்தேன்.. ரொம்ப லேட் ஆகிடுத்து... முயற்சி செய்து பாருங்க..
Author: Unknown
•Friday, January 11, 2013

16  புள்ளி கோலம்  :-


 17  புள்ளி கோலம்  :-


18 புள்ளி கோலங்கள் :-



 19 புள்ளி கோலங்கள் :-



21 புள்ளி கோலங்கள் :-






போடோஸ்  பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.... பொங்களுக்கு வாசலில் போட பயன்படும்னு அடுத்த செட் சீக்கிரம் போட்டு விட்டேன்...
Author: Unknown
•Thursday, January 10, 2013
மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் வாசலில் பெரிய கோலம் போடுவாங்க.. எங்க வீட்டில் ராம் ரொம்ப விரும்பி கேட்டும் என்னால போட முடியலை... எங்க அக்கா ரொம்ப அழகா கோலம் போடுவா... சாதாரணமா வாசலில் போய் நின்னுகிட்டு பெரிய பெரிய கோலம் எல்லாம் அசால்டா போட்டு விட்டு வருவா.... நான் அப்படி இல்லை... கோல நோட்டு இல்லாம வெளில போகவே மாட்டேன்.... :)

பொங்கல் நேரத்திலாவது பெரிய கோலம் போடலாம்னு நெட்டில் கோலம் தேட ஆரம்பித்தேன்.. அதை பார்த்து விட்டு, எங்க மாமியார் அவங்க கிட்ட இருந்த பழைய கோல நோட், அவள் விகடன், மங்கையர் மலர் புக் உடன் வந்த இணைப்பு கோல புக், பேப்பரில் வரைந்து வைத்த கோலம்னு நிறைய தந்தாங்க..... அதை எல்லாம் எடுத்து, எனக்கு போட வந்த கோலம் வரை தெளிவா என்னோட நோட்டில் போட்டு வைத்து இருக்கேன்.... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.... உங்க வீட்டு வாசலில் போட கூட இவை பயன்படலாம்.....

நிறைய கோலம் இருப்பதால் கோலங்கள் -1,2,3,4,.... என்று பகிர்ந்து கொள்ளலாம்னு இருக்கேன்.... என்ன சொல்லறீங்க ? ஓகே தானே ?

15 புள்ளி கோலங்கள் :-

15 புள்ளி 5 வரிசை, நேர்ப்புள்ளி, 5 இல் நிறுத்தவும்..


15 புள்ளி சந்துப்புள்ளி, 8 இல் நிறுத்தவும்..


15 புள்ளி 3 வரிசை, நேர்ப்புள்ளி, 3 இல் நிறுத்தவும்..


15 புள்ளி 8 வரை , 6 பக்கமும் 3,4,5 புள்ளிகள், சந்துப்புள்ளி


15 புள்ளி, சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்..


15 புள்ளி, சந்துப்புள்ளி, 6 - இல் நிறுத்தவும்...


15 புள்ளி 3 வரிசை, நேர்ப்புள்ளி, 3 - இல் நிறுத்தவும்...


15 புள்ளி, நேர்ப்புள்ளி, 1 - இல் நிறுத்தவும்...


15 புள்ளி, சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்....


15 புள்ளி,  சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்...



15 புள்ளி கோலங்கள் இன்னிக்கு பகிர்ந்து இருக்கேன்....


Related Posts Plugin for WordPress, Blogger...