Author: Priya ram
•Friday, August 30, 2013
இந்த பொங்கல் ரொம்ப ஈஸியா செய்துடலாம்....மகி ஒரு முறை அவங்க ப்ளாக் ல போஸ்ட் செய்து இருந்தாங்க...அதை பார்த்து ட்ரை பண்ணேன்...என்னோட மாமனார்க்கு ரொம்ப ரொம்ப புடிச்சு போச்சு...இப்போ நைட் டின்னெர்  பண்ணனும்னா, புளி பொங்கல் செய்துடுனு சொல்லுவார்... ஈஸி என்பதால் நானும் உடனே செய்து விடுவேன்....


தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வெந்தயம்
வேர்கடலை - 1 கைப்பிடி
கருவேப்பிலை
பெருங்காயம்
காய்ந்த மிளகாய் - 8
புளி -  எலுமிச்சை அளவு
உப்பு
பச்சரிசி நொய் - 1 ஆழாக்கு

செய்முறை :

திக்காக 2  கப் புளிக்கரைசல் எடுத்து வைக்கவும்...
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய், வேர்கடலை போட்டு வதக்கி புளி கரைசல் 2 கப் விட்டு, உப்பு போட்டு கொதிக்க விடவும்.....


நொய்யை களைந்து வடிய விட்டு  கொதிக்கும் புளிகரைசலில் போட்டு ஒரு முறை கிளறி குக்கரை மூடி, 2 விசில் விடவும்....




ப்ரெஷர் போனதும் குக்கரை திறந்து கிளறினால் புளி பொங்கல் தயார்....



வடாம்,சிப்ஸ் தொட்டுண்டு சாப்பிடலாம்....நான் தயிர் தொட்டுண்டு சாப்பிட்டேன்...ரொம்ப நல்லா இருந்தது....
Author: Priya ram
•Tuesday, August 06, 2013
Related Posts Plugin for WordPress, Blogger...