Author: Priya ram
•Wednesday, November 09, 2011

இந்த குருமா சப்பாத்தி , இட்லி, தோசைக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் - 1 
பீன்ஸ் - 6
கோஸ் - 1 / 4 
வெங்காயம் - 2 
தக்காளி - 2
எண்ணெய்
நெய்
லவங்கம் -  2 
சீரகம் - 1 / 2  ஸ்பூன்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
பால் - 1  கப்  
தயிர் - 1  கப் 


செய்முறை :

கேரட், பீன்ஸ், கோஸ் பொடியாக நறுக்கி வைக்கணும்.


வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கணும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய், நெய் விட்டு, சீரகம், லவங்கம் வெடிக்க விடனும். வெங்காயம், தக்காளி போட்டு வதக்கணும். உப்பு, வறட்டு மிளகாய் பொடி போட்டு ஒரு முறை கிளறனும். காய் எல்லாம் போட்டு வதக்கணும்.

பால், தயிர் விட்டு கலந்து காய் வேக விடனும்.


காய்கள் வெந்து குருமா ரெடி....

கொஞ்சம் அதிகமா பால், தயிர் சேர்த்து செய்தால் க்ரேவி மாதிரி கிடைக்கும்.

சப்பாத்தியுடன் பால், தயிர் குருமா சாப்பிட ரெடி.


Author: Priya ram
•Friday, October 21, 2011
ஒரு ரெண்டு வாரமா youtube -   ல வாழ்த்து அட்டை செய்வது எப்படின்னு பார்த்து கிட்டு இருந்தேன். பார்க்க பார்க்க ஆர்வம் அதிகமாக, வீட்டில் இருந்த பொருட்களை வைத்தும்,அருகில் உள்ள  கடையில் கிடைத்த பொருட்களை வைத்தும் என்னவருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை செய்து தந்தேன். அதன் தொடர்ச்சியாக, இன்னிக்கு என்னோட அக்கா பையன், இரண்டாவது  பிறந்த நாள். இது அவனுக்காக செய்த 
வாழ்த்து அட்டை.



  

இன்னிக்கு காலைல அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது,
Thank  you  சொல்லுனு அக்கா சொல்லி கொடுக்க, அவன் மழலை சொல்லில்
tank கூ  நு சொல்ல, கேட்க ரொம்ப அருமையா இருந்தது. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுகிட்டே இருக்கு.....
Author: Priya ram
•Wednesday, October 19, 2011

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 3/4 கப்
தண்ணீர் - 5 கப்
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு  
பெருங்காயம்
கருவேப்பிலை
உப்பு
காய்ந்த மிளகாய்

செய்முறை :

அரிசி, பருப்பை வாணலியில் (எண்ணெய் விடாமல் ) வறுத்து வச்சுக்கணும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, தண்ணீர் விட்டு, உப்பு போடணும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி, பருப்பு களைந்து போட்டு நன்றாக கிளறனும். அடுப்பை சிம் - யில் வைத்து பருப்பு, அரிசி வெந்ததும் இறக்கிடணும்.


பெருங்காயம் வாசனையுடன் உசிலி ரெடி.



இந்த உசிலி கூட கார சட்னி தொட்டுண்டு சாப்பிடலாம்.
Author: Priya ram
•Monday, October 17, 2011
பயத்தம் பருப்பு தோசை செய்வது ரொம்ப ஈஸி. இதில் கொத்தமல்லி நிறைய போட்டு செய்வதால், வாசனையாக ரொம்ப நல்லா இருக்கும். 


தேவையான பொருட்கள் :

அரிசி - 1  கப் 
பயத்தம் பருப்பு - 1  கப்
இஞ்சி 
பச்சை மிளகாய் - 2 
கொத்தமல்லி - 2 கப் 
உப்பு 
எண்ணெய்

செய்முறை :

பயத்தம் பருப்பு, அரிசியை  1  மணி நேரம் ஊற வைக்கணும்.



ஒரு மணி நேரத்துக்கு பிறகு மிக்சில கொர கொரன்னு  அரச்சுக்கணும்.

அதுல கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரச்சுக்கணும்.


 தோசை மாவு மாதிரி இருக்கணும்.


அரச்ச உடனே தோசை செய்து விடலாம்.


இந்த தோசைக்கு கொஞ்சமாக எண்ணெய் சேர்த்தால் போதும்.


தோசைக்கு தொட்டுக்க சட்னி, சாம்பார், மிளகாய் பொடி எது வேண்டுமானாலும் போட்டுக்கலாம். நான் முருங்கைக்காய் சாம்பார் தொட்டுண்டு சாப்பிட்டேன். உங்களுக்கு புடிச்சதை தொட்டுண்டு பெசரெட்டு செய்து சாப்பிட்டு பாருங்க.

Author: Priya ram
•Sunday, October 09, 2011
என்னவருக்கு பஜ்ஜினா ரொம்ப புடிக்கும். ஒரு சண்டே சாயந்திரம் காய் எல்லாம் கட் பண்ணி கொடுத்து,  பஜ்ஜி செய்து தரச்  சொல்லி கேட்டார். (காய் கட்பண்ணி வச்சுட்டா மறுப்பு சொல்லாம செய்து தந்து தானே ஆகணும். குலோப் ஜாமூன் செய்ய நாள் தள்ளின மாதிரி,  பஜ்ஜி செய்து தரவும் நாள் தள்ள போறேன்னு தான் காய் கட் பண்ணி தந்துட்டார் ). வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு பஜ்ஜி செய்து தந்தேன். என்னவருக்கு தக்காளி பஜ்ஜினா ரொம்ப புடிக்கும்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1  கப்
அரிசி மாவு - 1/4  கப்
வறட்டு மிளகாய் பொடி
உப்பு
பெருங்காயம்
வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு - 2 



மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி எல்லாம் போட்டு தண்ணீர் விட்டு, கொஞ்சம் திக்கா தோசை மாவு மாதிரி கரைச்சுக்கனும்.

என்னவர் கட் பண்ணி கொடுத்த காய்கள். தக்காளி, வெங்காயம், உருளை கிழங்கு, வட்ட வட்டமாக கொஞ்சம் திக்காக கட் பண்ணி வச்சுக்கணும்.

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் பஜ்ஜி ரெடி.


வெங்காயம், உருளைகிழங்கு பஜ்ஜி.


தக்காளி பஜ்ஜி.


இதே மாதிரி பீர்க்கங்காய், கத்தரிக்காய் பஜ்ஜியும் செய்து சாப்பிடலாம்.

குறிப்பு : அது என்ன.... சண்டே தான் பஜ்ஜி செய்து சாப்பிடனுமானு நீங்க கேட்கறது தெரியறது.... என்ன பண்ணறது.... மத்த நாள் எல்லாம் எங்க வீட்டு ரங்கமணி   ஆபீஸ் - ல இருந்து வரவே நைட் ஆகிடறது. பஜ்ஜி சாயந்தர நேரத்தில் சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். அதான் எங்க வீட்டுல பஜ்ஜினா சண்டே தான். அம்மா வீட்டுல பஜ்ஜி செய்தா கூடவே கேசரியும் செய்துடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும்.  
அட....  இன்னிக்கும் சண்டே.... எல்லோரும் உங்களுக்கு புடிச்ச பஜ்ஜி செய்து சாப்பிடுங்க..... :)



Related Posts Plugin for WordPress, Blogger...