Author: Priya ram
•Monday, January 24, 2011
இது என்னோட முதல் குறிப்பு. முதல் குறிப்பாக நான் படிச்சு ரசிச்ச   இந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தாய் வீடு !

வருடம் ஒருமுறை
புதையலெனக் கிடைக்கிறது
என் பிள்ளைகளுக்கு ........

அரவணைத்து
கதைகள் கூறி மகிழும்
தாத்தா, பாட்டி .....

பெருமையுடன்
ஊர் சுற்றிக் காட்டும்
மாமன்மார்கள் .....

செல்லமாகக் கடிந்து
உணவூட்டும்
சித்திமார்கள் ......

எனக்கும் கிடைத்து விடுகிறது
பழக்கமான கூடத்து ஓரத்தில்
அம்மாவின் சுண்டு விரல் பிடித்து
நிம்மதியாகக் கண்ணயர
ஆறுதலான ஒரு மடி !

Related Posts Plugin for WordPress, Blogger...