Author: Priya ram
•Thursday, August 04, 2011
இந்த ரசம் பித்தத்தை போக்கும். செய்முறையும் ரொம்ப ஈஸி.  எங்க மாமனார்க்கு டெய்லி சாப்பாட்டுல சாம்பார், காய் எதுவும் இல்லைனாலும் ரசம் கண்டிப்பா இருக்கணும்.  அதனால எங்க வீட்டுல தினமும் சாம்பார், காய், ரசம், சாதம்  இருக்கும். சாம்பார் மட்டும் டெய்லி மாறும். ஒரு நாள் சாம்பார், அடுத்த நாள் வத்த கொழம்பு, அடுத்த நாள் கீரை, அடுத்த நாள் மோர் கொழம்பு, அடுத்த நாள் அவியல், அடுத்த நாள் பொரிச்ச கூட்டு இப்படி டெய்லி ஒரு வகை இருந்தாலும்  ரசம் எப்பவும் இருக்கும். சாம்பார் தவிர்த்து மத்த நாள் எல்லாம் ரசத்துக்காக பருப்பு தனியா குக்கர்ல வைக்கணும். சாதம் எங்க மாமியார் வெண்கல பானை -ல வடிச்சு பண்ணுவாங்க. (சாதத்துல  இருக்க கஞ்சி சுகர் இருக்கவங்களுக்கு நல்லது இல்லைன்னு டெய்லி எங்க வீட்டுல சாதம் வடிப்பாங்க ) என்னிக்காவது ஒரு நாள் பருப்பு வைக்க கஷ்டமா இருந்தா, இந்த ரசம் பண்ணிடுவோம். சீக்கரம் பண்ணிடலாம்.

செய்முறை :

புளியை நல்லா கரைச்சு அதுல தக்காளி நறுக்கி போட்டு, உப்பு, மிளகாய் பொடி (கொஞ்சமா ), மஞ்சள் பொடி,பெருங்காயம்  போட்டு பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடனும்.


நன்றாக கொதித்ததும் ரசப்பொடி போடணும்.

தனியாக வாணலியில் கொஞ்சமாக நெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொஞ்சமாக வேப்பம்பூ போட்டு வறுத்து ரசத்துல கொட்டிடனும். ரசம் ரொம்ப கம்மியா தெரிந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலாம்.

ரசம் மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும்போது இறக்கிடணும்.

வேப்பம்பூ ரசம் ஒடம்புக்கு ரொம்ப நல்லது. மயக்கம், பித்தம் எல்லாம் சரி பண்ணும். தேங்காய் துவையல், வேப்பம்பூ ரசம் இருந்தால் எதுவும் வேண்டாம்.  ட்ரை பண்ணி பாருங்கோ.....
Author: Priya ram
•Wednesday, August 03, 2011
எங்க வீட்டுல எல்லாம் ஈச்சொம்பு -ல தான் ரசம் பண்ணுவாங்க. ரசம் வாசனையா அருமையா இருக்கும். ரசம் பண்ணறது ரொம்ப ஈஸி. இந்த பாத்திரத்தை அடுப்புல காலியா வச்சிட்டு வேலை பண்ண கூடாது. பத்திரம் அடிப்பகுதி மட்டும் தனியா வந்துடும். இதுல ரசம் பண்ணும் போது அடுப்பு சிம் - ல தான் இருக்கணும்.




துவரம் பருப்பை வேகவச்சு தனியா வைக்கணும்.

தனியா ஒரு பாத்திரத்தில்  புளியை கரைச்சு தண்ணிய ஈயச்சொம்புல விட்டு, பொடியா நறுக்கிய தக்காளி போட்டு, உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்புல ஏத்திடனும்.



இது தான் ஈயப்பாத்திரம். சூடா  இருக்கும்போது கிடுக்கி வச்சு புடிச்சா இப்படி தான் லைட் டா பள்ளம் விழும்.... :)

பச்சை வாசனை போனதும், வேக வச்ச துவரம் பருப்பு கொஞ்சமா எடுத்து அதுல தண்ணி விட்டு கரைச்சு விடனும்.  ( நிறைய பருப்பு விட்டால், கொஞ்சம் கொதிச்சதும் மேலாக எடுத்து அதுல ரசப்பொடி போட்டு ரசமாகவும், அடில திக்காக இருக்கும் பருப்புல கடுகு,வெந்தயம், பெருங்காயம் தாளிச்சு கொட்டி, ஏதாவது வேக வச்ச காய் போட்டு சுட வச்சு சாம்பார்- ஆகவும் யூஸ் பண்ணலாம். ஒரே நேரத்துல ரெண்டு வேலை ஆகிடும். ) ரசப்பொடி போடணும்.



மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும் போது கொத்தமல்லி போடணும்.


நெய் தனியாக காய வைத்து கடுகு, ஜீரகம், பெருங்காயம் தாளித்து கொட்டினால் ரசம் ரெடி.

காமெடி பகுதி : என்னவர் ஒரு நாள் இன்னிக்கு நான் ரசம் பண்ணறேன்னு சொன்னார்.  யாரும் சமையல் ரூம் உள்ள வரகூடாதுனு சொல்லிட்டார். சரி அவரே சரியா பண்ணிடுவார்னு நம்......பி..... நாங்களும் யாரும் போகலை. மொதல்ல ஈயச்சொம்பை அடுப்புல வச்சார். அதுல கொஞ்சம் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஜீரகம் எல்லாம் போட்டு விட்டு புளி தண்ணி விட்டா தண்ணி கீழ கொட்டறது. என்னனு பார்த்தா பாத்திரம் அடிப்பகுதி மட்டும் ரவுண் -  டா அழகா பேர்ந்து வந்து இருக்கு. அவர் சமைக்க போனதுல ஒரு ஈயச்சொம்பு வீண் ஆனது தான் மிச்சம்.  

பின் குறிப்பு : என்னோட ப்ளாக் - யை பின் தொடர்பவர் லிஸ்ட் ல என்னவர் இருந்தாலும், ப்ளாக் ஓபன் பண்ணி பார்ப்பதே இல்லை. அந்த தைரியத்தில் உங்களுடன் இந்த காமெடியை பகிர்ந்து கொண்டேன். :))))
Author: Priya ram
•Tuesday, June 21, 2011
இந்த ரசம் எனக்கு ரொம்ப புடிச்ச ரசம். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணா இந்த ரசம் உங்களுக்கும் புடிச்சுடும். இந்த ரசம் சாதத்துக்கு
கத்தரிக்காய் ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிட நல்லா இருக்கும்.



தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1  கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 1
உப்பு
மிளகாய் பொடி ( கொஞ்சமாக போட்டால் போதும். மிளகு காரம் தான் இந்த ரசத்துக்கு முக்கியம் )
மஞ்சள் பொடி
பெருங்காயம்
நெய் - 1  ஸ்பூன்
கடுகு - 1 /4 ஸ்பூன்

வறுத்து அரைக்க :

தனியா - 2  ஸ்பூன்
மிளகு - 2  ஸ்பூன்
சீரகம் - 2  ஸ்பூன்
கடலை பருப்பு - 1  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
தேங்காய் - 1 /2 கப்




செய்முறை :

துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு தனியாக வேக வைக்கவும்.
புளியை கரைத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி போட்டு மிளகாய் பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
வறுத்து அரைக்க கொடுத்து உள்ளதை வறுத்து அரைத்து வைக்கணும்.
அரைத்த விழுதை வேக வைத்து உள்ள துவரம் பருப்பில் கலந்து புளி தண்ணியில் கொட்டி கொதிக்க விடனும்.
ஒரு கொதி வந்ததும் திக்காக ரசம் வரும் அப்போ 2  டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து நுரைத்து வரும்போது ரசத்தை இறக்கிடணும்.
தனியாக நெய் சுட வைத்து கடுகு மட்டும் தாளித்து கொட்டனும்.
கொத்தமல்லி, கருவேப்பிலை நறுக்கி போடணும்.
நல்ல வாசனையோட மைசூர் ரசம் ரெடி. இந்த ரசம் சாதத்துக்கு ரோஸ்ட் காய் ஏதாவது தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ரா இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...