•Monday, March 28, 2011
இது என்னோட ரெண்டாவது பானை அலங்காரம். இது ரொம்ப ஈஸி. பானையை உப்பு தாள் போட்டு நல்லா தேச்சு அலம்பிட்டு காய வைத்து வெள்ளை எனாமல் பெயிண்ட் அடிக்கணும். அதை ஒரு நாள் காய விட்டுடனும். தனியா ஒரு ட்ரே- ல கொஞ்சமா தண்ணி எடுத்துக்கணும். அதுல சிவப்பு, மஞ்சள், நீலம் ( வேற ஏதாவது கலர் இருந்தா அதையும் சேர்த்துக்கலாம் ) கலர் எனாமல் பெயிண்ட் விட்டு பிரஷ் வச்சு ஒரு கலக்கு கலக்கணும். அப்புறம் பானையை அதில் ஒரே ஒரு முறை உருட்டி எடுக்கணும். இதை திரும்ப ஒரு நாள் காய வைத்தால் மார்பல் பெயிண்ட் செய்யப்பட்ட பானை தயார்.
