Author: Priya ram
•Thursday, April 14, 2011
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Author: Priya ram
•Friday, April 08, 2011

இந்த பெரிய மேட்டையும் உல்லன் நூல் வைத்து தான் பண்ணேன். இதற்க்கு பயன் படுத்தின சட்டம் கொஞ்சம் பெரிய சைஸ். இதை மாதிரி ரெண்டு மேட் செய்தால் ஒரு பை பண்ணலாம்.

 
பூக்களுக்கு நடுவில் மணி வைக்காம இந்த மாடல் செய்து இருக்கேன். டெலிபோன் மேட்- ல செய்தது  போல் மணி வைத்தும் செய்யலாம்.


Author: Priya ram
•Wednesday, April 06, 2011



இந்த மேட்டை உல்லன் நூல் வைத்து பண்ணேன். இதை செய்ய  எக்சகன் ஷேப் - ல ஒரு மர சட்டம் வேண்டும். அந்த சட்டம் இருந்தால் ஈஸி - யா இந்த மேட்டை செய்து விடலாம். இதில் ஒவ்வொரு பூக்களுக்கும் நடுவில் மணி கோர்த்து செய்து இருக்கேன்.






Author: Priya ram
•Monday, April 04, 2011


உல்லன் நூலை வைத்து  இந்த பூனையை செய்தேன். 



இந்த பூனையை பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லாம போயிடாதீங்க...
 அப்புறம் உங்க வீட்டு பாலை முழுக்க இது வந்து குடித்து விடும்.


Author: Priya ram
•Friday, April 01, 2011
  


  
தக்காளி தொக்கு எங்க வீட்டுல ரெண்டு விதமா பண்ணுவோம். ஒன்னு தக்காளிய அரைத்து  பண்ணுவது மற்றொன்று தக்காளியை பொடியாக நறுக்கிட்டு பண்ணறது. இந்த தொக்கு தக்காளியை அரைத்து பண்ணேன்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 1  / 2  கிலோ
கடுகு - 1  / 4  ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கொஞ்சம்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள்  பொடி -  1  / 4  ஸ்பூன்
வறட்டு மிளகாய் பொடி - 1  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு




செய்முறை :

ஒரு   வாணலியில் எண்ணெய்  விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து தக்காளியை தண்ணி விடாமல்  அரைத்து கொட்டி அதில் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறி மூடி வைக்கணும்.அடுப்பை சிம் - ல வைக்கணும்.  இது நன்றாக கொதித்து தக்காளி தொக்கு திக்காக  எண்ணெய் ஓரத்தில் சேர்ந்து வரும்போது வாணலியை இறக்கிடணும். தக்காளி தொக்கு ரெடி.

                                               
Related Posts Plugin for WordPress, Blogger...