Author: Priya ram
•Wednesday, June 15, 2011
இது என்னோட ஐம்பதாவது போஸ்ட்.
எங்க மாமியார்காக நான் செய்த உல்லன்  பர்ஸ் இது.





ரன்னர் ஒரு பக்கம் கோர்த்து ஸ்டிச் பண்ணா பர்ஸ் ரெடி.
Author: Priya ram
•Tuesday, June 14, 2011
சிவப்பு கிறிஸ்டல் மணி வைத்து இந்த மாலையை செய்தேன்.




Author: Priya ram
•Sunday, June 12, 2011



போண்டா செய்ய தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1  கப்
மிளகு
உப்பு
அரிசி மாவு
தேங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது

சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

தேங்காய்,
பொட்டுகடலை
பச்சை மிளகாய்
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை





செய்முறை :

உளுத்தம் பருப்பு 1 /2  மணி நேரம் ஊற வச்சு தண்ணி கொஞ்சமா விட்டு அரச்சுக்கணும்.
மாவுல கொஞ்சமா அரிசி மாவு, உப்பு, மிளகு, சின்ன சின்னதாய் நறுக்கிய தேங்காய் போட்டு நன்றாக பிசையனும்.
எண்ணெய் காய வச்சு அதில் உருட்டி போட்டு பொறித்து எடுத்தால்  போண்டா தயார்.

தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து  தனியா எடுத்துக்கணும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டினால் சட்னி ரெடி.





Author: Priya ram
•Friday, June 10, 2011
சௌ சௌ பொரிச்ச கூட்டு ரெண்டு விதத்தில் செய்யலாம். அதில் oru வகை idhu.

தேவையான பொருட்கள் :

சௌ சௌ - 1
பயத்தம் பருப்பு - 1  கரண்டி
தக்காளி - 1
மஞ்சள் பொடி - 1  சிட்டிக்கை
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை
எண்ணெய்


அரைக்க :
மிளகு - 1  ஸ்பூன்
சீரகம் - 1  ஸ்பூன்
தேங்காய் - தேவையான அளவு




செய்முறை :

சௌ சௌ- வை சின்ன சின்னதா கட் பண்ணிக்கணும்.
குக்கர் - ல பயத்தம் பருப்பு, சௌ சௌ, தக்காளி,மஞ்சள் பொடி,  கொஞ்சம் உப்பு  போட்டு குழைய வேக வைக்கணும்.
அரைக்க கொடுத்து உள்ளதை அரைச்சிக்கனும்.
வாணலியில்  எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வேக வைத்து இருக்கும் பருப்பை மசித்து கொட்டி, அரச்சு வச்சு irukkaradhayum கொட்டி, உப்பு போட்டு ஒரு 2  நிமிடம் கொதிக்க விடனும்.
pachchai வாசனை போனதும் இறக்கினால் பொரிச்ச கூட்டு redi.




Author: Priya ram
•Wednesday, June 08, 2011


ஓமப்பொடி செய்ய தேவையான பொருட்கள் :

ஓமம் - 1  ஸ்பூன்
கடலை மாவு - 2  கப்
அரிசி மாவு - 1  கப்
உப்பு
பெருங்காயம்
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்






செய்முறை :
மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சமாக தண்ணீர்  விட்டு பிசைந்து கொள்ளவும். குழலில் ஓமப்பொடி  தட்டு போட்டு பிசைந்த  மாவை போட்டு  எண்ணையில் பிழிந்து பொறித்து எடுத்தால் ஓமப்பொடி  தயார்.
Related Posts Plugin for WordPress, Blogger...