Author: Priya ram
•Thursday, August 25, 2011
என்னவர் குலாப்ஜாமூன் பண்ண சொல்லி ரொம்ப நாளா கேட்டு கிட்டே இருந்தார். மகியோட dry ஜாமூன் பார்த்து எனக்கும் பண்ணனும்னு ஆசையா இருந்தது.
நேத்து ஜாமூன் செய்து அதில் சிலவற்றை சுகர் -ல உருட்டி வைத்தேன்.
என்னவருக்கு ரொம்ப புடிச்சு இருந்தது. விரும்பி சாப்பிட்டார்.
ஹாட் ஜாமூன் வித் ஐஸ்-கிரீம் சாப்பிட்டால் நல்லா இருக்கும்னு மகி ஐடியா தந்ததால், அதையும் ட்ரை பண்ணலாம்னு என்னவர் அலுவலகத்தில் இருந்து வருவதற்குள் ஐஸ்-கிரீம் வாங்கி வந்து வைத்து இருந்தேன்.
ஐஸ்-கிரீம் கூட ஜாமூன் வைத்து தந்தேன். ஒரே சர்ப்ரைஸ் அவருக்கு. ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தார். பண்ணவே இல்லை. திடீர்னு பண்ணேன். மகி சொல்லி இருந்த மாதிரி ஜாமூன் பொறித்து கொஞ்சம் ஆறியதும், சர்க்கரை, தண்ணீர் சம அளவு எடுத்து பாகு செய்து (கம்பி பதம் எல்லாம் இல்லை, சும்மா கொதி வந்தா போதும் ) அதில் ஜாமூன் போட்டு, ஏலக்காய் போட்டு செய்தேன். நான் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செய்து இருக்கேன். ரவை,பால் பவுடர் வைத்து அடுத்த முறை ட்ரை பண்ணனும். (இதை பண்ணவே இத்தனை நாள் ஆச்சு, அதை எப்போ ட்ரை பண்ண போறேனோ !!!! :) ) அடுத்து காந்த்வி ட்ரை பண்ணேன். நல்லா வந்தது மகி. இந்த தடவை போட்டோ எடுக்கலை. அடுத்த முறை செய்யும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்.
Author: Priya ram
•Saturday, August 20, 2011
மல்டி கலர் கிறிஸ்டல் மணிகள் வைத்து இதை செய்தேன்.
ப்ளூ கலர் கிறிஸ்டல் மணிகள் வைத்து இதை செய்தேன்.
கிரீன் கலர் மணிகள் வைத்து இதை செய்தேன்.
Author: Priya ram
•Wednesday, August 10, 2011
தேங்காய் சேர்த்து செய்ய கூடிய எல்லா காயும் எங்க வீட்டுல இப்படி தான் செய்வாங்க. இந்த மாதிரி முறைல அவரைக்காய், பீன்ஸ், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய்,வாழைக்காய்,கோஸ், குடைமிளகாய், -ல செய்யலாம்.
நான் அவரைக்காய் - ல செய்து இருக்கேன்.
செய்முறை :
அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கணும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் (தேங்காய் போட்டு செய்யும் காய்க்கு எல்லாம் கொஞ்சமாக எண்ணெய் விட்டால் போதும் ) விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி, நறுக்கிய காயை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு,உப்பு போட்டு மூடி வேக விடனும். நன்றாக வெந்ததும், துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கிடணும்.
கொத்தமல்லி கொஞ்சம் பொடியாக நறுக்கி தூவினால் நன்றாக இருக்கும். வெண்டைக்காய் இந்த முறையில் செய்யும் பொழுது தண்ணீர்க்கு பதில் கொஞ்சம் மோர் இல்லைனா புளி தண்ணி கொஞ்சம் விட்டால் கொழ கொழப்பு நீங்கி வெந்து வரும். கோஸ் பண்ணும் போது பயத்தம் பருப்பு கொஞ்சம் ஊறவச்சு காய் பண்ணும்போது சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும். குடைமிளகாய் செய்யும் போது தேங்காய் தூவி செய்யலாம் இல்லைனா வெந்த துவரம் பருப்பு கொஞ்சம் போட்டு கலந்து முடிக்கலாம். எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்.
Author: Priya ram
•Thursday, August 04, 2011
இந்த ரசம் பித்தத்தை போக்கும். செய்முறையும் ரொம்ப ஈஸி. எங்க மாமனார்க்கு டெய்லி சாப்பாட்டுல சாம்பார், காய் எதுவும் இல்லைனாலும் ரசம் கண்டிப்பா இருக்கணும். அதனால எங்க வீட்டுல தினமும் சாம்பார், காய், ரசம், சாதம் இருக்கும். சாம்பார் மட்டும் டெய்லி மாறும். ஒரு நாள் சாம்பார், அடுத்த நாள் வத்த கொழம்பு, அடுத்த நாள் கீரை, அடுத்த நாள் மோர் கொழம்பு, அடுத்த நாள் அவியல், அடுத்த நாள் பொரிச்ச கூட்டு இப்படி டெய்லி ஒரு வகை இருந்தாலும் ரசம் எப்பவும் இருக்கும். சாம்பார் தவிர்த்து மத்த நாள் எல்லாம் ரசத்துக்காக பருப்பு தனியா குக்கர்ல வைக்கணும். சாதம் எங்க மாமியார் வெண்கல பானை -ல வடிச்சு பண்ணுவாங்க. (சாதத்துல இருக்க கஞ்சி சுகர் இருக்கவங்களுக்கு நல்லது இல்லைன்னு டெய்லி எங்க வீட்டுல சாதம் வடிப்பாங்க ) என்னிக்காவது ஒரு நாள் பருப்பு வைக்க கஷ்டமா இருந்தா, இந்த ரசம் பண்ணிடுவோம். சீக்கரம் பண்ணிடலாம்.
செய்முறை :
புளியை நல்லா கரைச்சு அதுல தக்காளி நறுக்கி போட்டு, உப்பு, மிளகாய் பொடி (கொஞ்சமா ), மஞ்சள் பொடி,பெருங்காயம் போட்டு பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடனும்.
நன்றாக கொதித்ததும் ரசப்பொடி போடணும்.
தனியாக வாணலியில் கொஞ்சமாக நெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொஞ்சமாக வேப்பம்பூ போட்டு வறுத்து ரசத்துல கொட்டிடனும். ரசம் ரொம்ப கம்மியா தெரிந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலாம்.
ரசம் மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும்போது இறக்கிடணும்.
வேப்பம்பூ ரசம் ஒடம்புக்கு ரொம்ப நல்லது. மயக்கம், பித்தம் எல்லாம் சரி பண்ணும். தேங்காய் துவையல், வேப்பம்பூ ரசம் இருந்தால் எதுவும் வேண்டாம். ட்ரை பண்ணி பாருங்கோ.....
Author: Priya ram
•Wednesday, August 03, 2011
எங்க வீட்டுல எல்லாம் ஈச்சொம்பு -ல தான் ரசம் பண்ணுவாங்க. ரசம் வாசனையா அருமையா இருக்கும். ரசம் பண்ணறது ரொம்ப ஈஸி. இந்த பாத்திரத்தை அடுப்புல காலியா வச்சிட்டு வேலை பண்ண கூடாது. பத்திரம் அடிப்பகுதி மட்டும் தனியா வந்துடும். இதுல ரசம் பண்ணும் போது அடுப்பு சிம் - ல தான் இருக்கணும்.
துவரம் பருப்பை வேகவச்சு தனியா வைக்கணும்.
தனியா ஒரு பாத்திரத்தில் புளியை கரைச்சு தண்ணிய ஈயச்சொம்புல விட்டு, பொடியா நறுக்கிய தக்காளி போட்டு, உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்புல ஏத்திடனும்.
இது தான் ஈயப்பாத்திரம். சூடா இருக்கும்போது கிடுக்கி வச்சு புடிச்சா இப்படி தான் லைட் டா பள்ளம் விழும்.... :)
பச்சை வாசனை போனதும், வேக வச்ச துவரம் பருப்பு கொஞ்சமா எடுத்து அதுல தண்ணி விட்டு கரைச்சு விடனும். ( நிறைய பருப்பு விட்டால், கொஞ்சம் கொதிச்சதும் மேலாக எடுத்து அதுல ரசப்பொடி போட்டு ரசமாகவும், அடில திக்காக இருக்கும் பருப்புல கடுகு,வெந்தயம், பெருங்காயம் தாளிச்சு கொட்டி, ஏதாவது வேக வச்ச காய் போட்டு சுட வச்சு சாம்பார்- ஆகவும் யூஸ் பண்ணலாம். ஒரே நேரத்துல ரெண்டு வேலை ஆகிடும். ) ரசப்பொடி போடணும்.
மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும் போது கொத்தமல்லி போடணும்.
நெய் தனியாக காய வைத்து கடுகு, ஜீரகம், பெருங்காயம் தாளித்து கொட்டினால் ரசம் ரெடி.
காமெடி பகுதி : என்னவர் ஒரு நாள் இன்னிக்கு நான் ரசம் பண்ணறேன்னு சொன்னார். யாரும் சமையல் ரூம் உள்ள வரகூடாதுனு சொல்லிட்டார். சரி அவரே சரியா பண்ணிடுவார்னு நம்......பி..... நாங்களும் யாரும் போகலை. மொதல்ல ஈயச்சொம்பை அடுப்புல வச்சார். அதுல கொஞ்சம் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஜீரகம் எல்லாம் போட்டு விட்டு புளி தண்ணி விட்டா தண்ணி கீழ கொட்டறது. என்னனு பார்த்தா பாத்திரம் அடிப்பகுதி மட்டும் ரவுண் - டா அழகா பேர்ந்து வந்து இருக்கு. அவர் சமைக்க போனதுல ஒரு ஈயச்சொம்பு வீண் ஆனது தான் மிச்சம்.
பின் குறிப்பு : என்னோட ப்ளாக் - யை பின் தொடர்பவர் லிஸ்ட் ல என்னவர் இருந்தாலும், ப்ளாக் ஓபன் பண்ணி பார்ப்பதே இல்லை. அந்த தைரியத்தில் உங்களுடன் இந்த காமெடியை பகிர்ந்து கொண்டேன். :))))